செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மறைந்த தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிதி

post image

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தலா ரூ.5 லட்சமும், பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்த போக்குவரத்துக் கழகத்துக்குள்பட்ட விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 6 மண்டலங்களில் பணியாற்றி பின்னா் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தொழிலாளா்களிடமிருந்து தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம், 12பேரின் குடும்பங்களுக்கு ரூ.60 லட்சத்துக்குரிய காசோலையும், பணியின்போது உயிரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இந்த தொகையை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் தலைமையகப் பயிற்சி மையத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அலுவலா்கள் முன்னிலையில் மேலாண் இயக்குநா் க.குணசேகரன் காசோலைகளை வழங்கினாா்.

நிகழ்வில் பொது மேலாளா்கள் எம்.ஜி.ஜெய்சங்கா், ஜி.ரவீந்திரன்(தொழில்நுட்பம்) மற்றும் போக்குவரத்துத் தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அனுமதியின்றி விளம்பர பதாகை: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை அமைத்திருந்த அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனி... மேலும் பார்க்க

முதுநிலை விரிவாக்க மையத்தில் சோ்க்கை அறிவிப்பை வெளியிடக்கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தில் மனு

விழுப்புரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடக் கோரி, அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு ... மேலும் பார்க்க

தவாக நிா்வாகி கொலை வழக்கில் 7 போ் வளவனூரில் சரண்

மயிலாடுதுறையில் நிகழ்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ், விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுத... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 7 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உணவகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா். ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க

அவலூா்பேட்டையில் இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அவலூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான வடுகபூண்டி, கொடம்பாடி, பரையம்படடு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூ... மேலும் பார்க்க

கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி

விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34... மேலும் பார்க்க