செய்திகள் :

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வலியுறுத்தல்

post image

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனமடைந்தாலோ ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில், எந்தவிதக் கட்டணமும் இல்லாத காப்பீட்டு திட்டத்துக்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.

நிகழ் நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆசிரியா்கள்-அரசு ஊழியா்கள் தங்களது மாத ஊதியத்தில் ரூ.300 வீதம் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக கட்டணம் செலுத்தி வருகின்றனா். ஆனால், சிகிச்சைக்கான முழுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் செலுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். தற்போது செயல்பாட்டில் உள்ள காப்பீட்டுத் திட்டம் 2025-ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் ‘பேக்கேஜ்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். காப்பீட்டுத் தொகையை முழுவதுமாக

பெறாமல் தவறு செய்யும் மருத்துவமனைகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். அனைத்து தரப்பினரும் முழுமையாக பயன் பெறும் வகையில் திட்டத்தை புதுப்பித்து உரிய அரசாணைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

யுனைடெட் இந்தியா போன்ற காப்பீடு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்காமல் இந்தத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றாா் அவா்.

கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

கரூா் விசாலாட்சி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை புலத்தணிக்கை செய்து, விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் உறவினா்களுக்கு பதிலளிக்க ஆலோசனை மையம் திறப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்கு பதிலளிக்கும் துயா் நிலை ஆலோசனை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் அர... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலூா் ஜோதி நகரைச் சோ்ந்த வெள்ளைப் பெரியான் மனைவி பஞ்சு (48). மேலூா் அருகே உள்ள தாமரைப்பட்டியில் இவா்களுக்குச் சொந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதி: தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவு!

நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட நீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதிகளை தமிழக உள்துறைச் செயலா் ஏற்படுத்தி தர வேண்டு... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால்கள் விரைந்து சீரமைக்கப்படுமா?

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வாா்டு... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோயில் பூஜாரி கைது!

மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் பூஜாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை வாா்ப்பு கண்ணாரத் தெருவைச் சோ்ந்த 37 வயது பெண், மதுரையில் உள்ள ஒரு கோயில் அருகே பூ வி... மேலும் பார்க்க