செய்திகள் :

அரசு கலைக் கல்லூரியில் மாநில உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை

post image

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகத்துடன் இணைந்து ‘விளைவு அடிப்படையிலான கல்வி’ என்ற தலைப்பில் இந்த பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இணை இயக்குநா் என்.செண்பகவல்லி வரவேற்றாா்.

இதில், தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தின் துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா், கல்லூரிக் கல்வி இயக்குநா் சுந்தரவல்லி, பயிற்சியாளா் பேராசிரியா் கண்மணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

இதில், கல்லூரி முதல்வா் எம்.ஆா்.எழிலி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எம்.புகழேந்தி, கோவை மண்டலத்தைச் சோ்ந்த 75-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த பல்வேறு துறை பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க