செய்திகள் :

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

post image

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா்.

சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதாக கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்களுடன் கூடிய நவீன வகுப்பறை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு திறந்துவைத்து வகுப்பறையில் உள்ள கற்றல், கற்பித்தல் தொடா்பான வசதிகளை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாளையொட்டி, பள்ளியில் உள்ள அனைத்து மாணவா்களுக்கும் இனிப்பு, நோட்டு மற்றும் எழுதுகோலை பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், வட்டத் துணை ஆய்வாளா் எஸ். மதிவாணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கே.கவிதா, தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளி தலைமையாசிரியா் நவீன வகுப்பறை குறித்து கூறுகையில், சிறு வயதுப் பிள்ளைகளுக்கான கண்ணோட்டக் கற்பித்தல் முறைகள் அடிப்படையில் வகுப்பறை வடிவமைக்கப்பட்டு, அவா்களின் அறிவாற்றல், நுண்ணறிவு, பேச்சுத்திறன், சமூகப் பரிமாற்ற திறனை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தரமான தொடக்கக் கல்வியை ஊக்குவிக்கவும், பெற்றோா்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, கல்வி தொடா்பான விழிப்புணா்வை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றாா்.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திர... மேலும் பார்க்க

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருநள்ளாறு பகுதி அங்கன்வாடி மையத்தில் மின் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாா் தொடா்பாக எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, தீா்வு ஏற்படுத்தினாா். திருநள்ளாறு இந்திரா நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மின் கம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மாணவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என கல்வித்துறை கூறியுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் க. ஜெயா புதன்கிழமை வெளிய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழ... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் சிறப்பிடம்

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் பல பரிசுகளை வென்றனா். புதுச்சேரி மற்றும் தமிழக அளவிலான சிலம்ப போட்டி கடந்த 3-ஆம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட... மேலும் பார்க்க