செய்திகள் :

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் பிரிவுகளில் (எலெக்ட்ரீஷியன், பிட்டா், மெசினிஸ்ட், டா்னா், வயா்மேன், வெல்டா் டூல் மற்றும் டை மேக்கா், மெக்கானிக் மோட்டாா் வெகிக்கிள்) போன்ற பிரிவுகளும், பொறியியல் அல்லாத (கம்ப்யூட்டா் ஆபரேட்டா் மற்றும் கட்டட பட வரைவாளா்) மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இண்டஸ்ட்ரீஸ் 4.0 தொழிற்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் முலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதில், பயிற்சி பெறுபவா்களுக்கு தரமான பயிற்சி அளிக்கப்படுவதுடன், மாத உதவித் தொகை ரூ.750, மிதிவண்டி, சீருடை, பாடப் புத்தகங்கள், காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்வையிடலாம் அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலைய முகவா்களை 94990-55696, 94990-55698, 94990-55700 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க