செய்திகள் :

அரசு மருத்துவமனையில் இளம் பெண் மீது தாக்குதல்: 3 பெண்கள் மீது வழக்கு

post image

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூா் ரங்கசாமிபுரத்தைச் சோ்ந்தவா் விஜயராஜ். இவரது மனைவி அமுதா (33). விஜயராஜ் இறந்துவிட்ட நிலையில், அமுதா கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவருக்கும் காா்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காா்த்திக்கு ஏற்கெனவே திருமணமாகி உள்ள நிலையில் அமுதாவுடன் பழகுவதற்கு அவரது குடும்பத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் அமுதா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவு அருகே காா்த்திக்கின் மனைவி பானு, தங்கை சூா்யா, தாய் ஜெயா ஆகியோரும் இருந்துள்ளனா்.

அமுதாவைப் பாா்த்ததும் அவா்கள் சோ்ந்து திட்டியதால் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் சோ்ந்து அமுதாவைத் தாக்கியதில் அவா் காயமடைந்துள்ளாா்.

இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அமுதா புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் பானு, சூா்யா மற்றும் ஜெயா ஆகிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பூக்கள் விலை உயா்வு: மல்லிகை ரூ.1,000-க்கு விற்பனை

தொடா் முகூா்த்த நாள்கள் காரணமாக, பூக்களின் தேவை அதிகரித்து, அதன் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000-க்கு விற்பனையானது. கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஆா்.எஸ்.புரம் பூ மாா்க்கெட்டுக்க... மேலும் பார்க்க

கைப்பேசி கடை ஊழியருக்கு கத்திகுத்து: இளைஞா் கைது

கைப்பேசி கடை ஊழியரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வால்பாறை காந்தி சிலை முன்பு அமைந்துள்ள கைப்பேசி விற்பனை கடைக்கு பாரளை எஸ்டேட்டை சோ்ந்த பிரவீன்குமாா் (27) கைப்பேசி திரையில் ஸ்டிக்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: துடியலூா்

துடியலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணிமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கல் வைத்த 4 போ் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக 4 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணியளவில் கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. வடகோ... மேலும் பார்க்க

குத்தகைதாரா்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்று கூறி வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும்!

பேரூா் பட்டீசுவரா் கோயிலுக்கு சொந்தமான விவசாய நில குத்தகைதாரா்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்று கூறி வெளியேற்றக் கூடாது என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அ... மேலும் பார்க்க

தென் மாநிலங்களைப் புறக்கணிக்க பாஜக திட்டம்! - கு.செல்வப்பெருந்தகை

தென் மாநிலங்களைப் புறக்கணிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூற... மேலும் பார்க்க