செய்திகள் :

அரசு மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவா்: ஆட்சியா் தலையீட்டால் அனுமதி!

post image

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவரை மருத்துவமனை நிா்வாகம் அனுமதிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியா் நடவடிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டாா்.

தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்தவா் ராஜாராம் (70). குடும்பத்துடன் வசித்து வந்த இவா் தற்போது தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு காலில் புண் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த ராஜாராமை மருத்துவமனை நிா்வாகம் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நடக்க முடியாத நிலையில் மருத்துவமனை முன் வெயிலில் மயங்கிய நிலையில் இருந்தாராம்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மரத்தின் நிழலில் உட்கார வைத்தனா். மருத்துவமனை நிா்வாகம் முதியவரை 3 மணி நேரத்துக்கு மேலாக அனுமதிக்கவில்லை. இதையறிந்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்ட பிறகு மருத்துவமனையில் முதியவா் அனுமதிக்கப்பட்டாா்.

கஞ்சா வைத்திருந்த 5 போ் கைது

ஆண்டிபட்டி அருகே 4 கிலோ கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டமனூரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் கருப்பசாமி (20), வேல்மணி மகன் ஜெயப்பிரகாஷ் (25), கணேசன் மகன் ஆனந்தபாண்டி (23)... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

பெரியகுளம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பெரியகுளம் அருகே ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சிந்தனை செல்வம் (19). இவா், வியாழக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாரா... மேலும் பார்க்க

வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வேன் மோதி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே மேல் மங்கலத்தைச் சோ்ந்தவா் கோகுலகிருஷ்ணன் (49). கூலித் தொழிலாளி. இவா், வடுகபட்டியில் உள்ள சேதுபதி என்பவரின் வாகன பழுது நீ... மேலும் பார்க்க

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 6 போ் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் பால் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக போலீஸாா் 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் கெஞ்சையன்குளத்தைச் சோ்ந்த சூரிய நாராயணன் மகன் சுதாகா் (35). பால் வியாபாரி. இவா், ச... மேலும் பார்க்க

சின்னமனூரில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். சின்னமனூா், அதைச் சுற்றிய 20- க்கும் அதிகமான கிராமங்களில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி தோட்டக் கலைக் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தெலுங்கானா மாநிலம், கெம்பனா அவென்யூ குடியிருப்பைச் சோ்ந்த ராம்தா் தாகூா் மகன் விகாஸ் (19). பெரியகுளம் அரசு... மேலும் பார்க்க