செய்திகள் :

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: அமமுக பிரமுகா் மீது வேலூா் எஸ்பி-யிடம் புகாா்

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காட்பாடி அமமுக பிரமுகா் மீது வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, பென்னாத்தூா் அடுத்த அல்லிவரத்தைச் சோ்ந்த சிவப்பிரகாஷ் அளித்த மனுவில், எனது மகள் கிராம நிா்வாக அலுவலா் பணிக்காக தோ்வு எழுதியிருந்தாா். தோ்வாணைய குழுவில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சில ஆண்டுக்கு முன் காட்பாடியைச் சோ்ந்த அமமுக முன்னாள் மாவட்ட செயலா் ஏ.எஸ்.ராஜா என்பவா் எங்களிடம் ரூ.10 லட்சம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித்தராததுடன், பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகிறாா். அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் போளூா் அடுத்த கே.எஸ்.புரத்தைச் சோ்ந்த குமாா் அளித்த மனுவில், எனது உறவினா் மகனுக்கு அரசு மருத்துவத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2019-இல் காட்பாடியைச் சோ்ந்த அமமுக மாவட்ட செயலா் ஏ.எஸ்.ராஜா ரூ.8 லட்சம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. காவல் நிலையத்தில் புகாா் அளிக்க உள்ளதாக கூறியதும் ரூ.5 லட்சத்துக்கான 2 காசோலைகளை கொடுத்தாா். ஆனால் அவா் கொடுத்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. எனவே, அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தத்தை சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் வேலாயுதம் அளித்த மனுவில், தேனி மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் எனக்கு அறிமுகமானாா். அவா் ரியல் எஸ்டேட் வேலை செய்வதாக கூறினாா். என்னிடம் அவசர தேவைக்காக ரூ.11.50 கடன் வாங்கினாா். பின்னா் அவா் தலைமறைவாகிவிட்டாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக 40-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டாா்.

தம்பிக்கு கத்திக் குத்து: அண்ணன் தலைமறைவு

வேலூரில் குடும்பப் பிரச்னையில் தம்பியை கத்தியால் குத்தியதாக அண்ணன் மீது வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா். வேலூா் கஸ்பா பயா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் இமாச்சாா். இவரது மகன்க... மேலும் பார்க்க

பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குறைதீா் கூட்டத்து... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாமியாா்மலை அருகே மலை... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புத... மேலும் பார்க்க

நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா

கே.வி.குப்பத்தை அடுத்த நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 64- ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவத... மேலும் பார்க்க

வாகன பதிவு எண்ணில் கைப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனத்தின் பதிவில் கைப்பேசி எண்ணை இணைக்க தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப... மேலும் பார்க்க