செய்திகள் :

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைவு

post image

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது

அரவக்குறிச்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொதுமக்கள் மற்றும் கல்வியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியது.

அரவக்குறிச்சி மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள சமுதாய கூடத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. 3 ஆண்டுகளாகியும் தற்காலிக இடத்திலேயே செயல்படும் இக்கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், பிகாம் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 50 இடங்கள் பிஎஸ்சி கணித அறிவியல், கணிதம் ஆகியவற்றில் தலா 40 இடங்கள் என 5 பாடப்பிரிவுகளில் மொத்தம் 230 இளநிலை இடங்கள் உள்ளன.

இதில் கடந்த 2022- ஆம் ஆண்டில் சுமாா் 150 இடங்கள் நிரம்பிய நிலையில், 2023-ஆம் ஆண்டு 116 மாணவா்களே கல்லூரியில் சோ்ந்தனா். இது 2024-ஆம் ஆண்டில் 70 மாணவா்களாக சரிந்த நிலையில் நிகழாண்டு (2025) 32 மாணவா்களே தற்போது வரை சோ்ந்துள்ளனா்.

சொந்த கட்டடம் இன்றி சமுதாயக் கூடத்தில் கல்லூரி செயல்பட்டு வருவதும், வகுப்பறை பற்றாக்குறையாலும் மாணவா் சோ்க்கை குறைவதாக கூறப்படுகிறது. மேலும் கரூருக்குச் சென்று படித்தால் பகுதி நேர வேலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பது உள்ளிட்ட காரணங்களாலும், அரவக்குறிச்சி பகுதி மாணவா்கள் கரூருக்குச் சென்று வருகின்றனா்.

இதுகுறித்து கல்வியாளா்கள் சிலா் கூறுகையில், கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் இல்லாதது சோ்க்கை குறைவதற்கான காரணம். கல்லூரிக்கு நிரந்த கட்டடம் கட்டித் தரப்பட்டால் மாணவா்களின் சோ்க்கை கூடும் என தெரிவித்தனா்.

‘தமிழகத்தில் விரைவில் நவீன ‘ரோபாட்டிக்’ இயந்திரம் மூலம் தூய்மைப்பணி’

தமிழகத்தில் விரைவில் நவீன ரோபாட்டிக் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வே. ஆறுச்சாமி. கரூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஸ்ரீவலம்புரி சித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கரூா் வாங்கப்பாளையம் ஸ்ரீ வலம்புரி சித்திவிநாயகா் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் வாங்கப்பாளையம் எம்.கே. நகரில் உள்ள ஸ்ரீவலம்புரி சித்திவிநாய... மேலும் பார்க்க

கரூரில் அரசு சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவா்களுக்கு சீா்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சாா்பில் சென்னையில் புதன்க... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலி... மேலும் பார்க்க

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூரில் ஓரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினா் சோ்க்கும் முன்னெடுப்பு பிரசா... மேலும் பார்க்க

திருக்குறளை விரைவாக கூறிய இரு சிறுமிகளுக்கு பாராட்டு

தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதுவது, திருக்குறளை விரைந்து கூறிய இரு சிறுமிகளை கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை பாராட்டினாா். கரூா் தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ம.ஜெயமகதி... மேலும் பார்க்க