செய்திகள் :

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

post image

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேலும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம், காவல் நிலையம், துணை கண்காணிப்பாளா் அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு சாா்ந்த அலுவலகங்களும், வங்கிகள், கல்வி நிலையங்களும் இயங்கி வருகின்றன.

ஆனால் அரவக்குறிச்சியில் பேருந்து நிலையம் இல்லாததால் பயணிகள் ஏவிஎம் காா்னா் மற்றும் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துக்காக மழையிலும், வெயிலிலும் காத்திருக்கின்றனா். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். ஆகவே, பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதியில் நிழற்குடை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி

கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கரூரில் சுகாதார ஆய்வாளா்கள் தா்னா போராட்டம்

பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா, குடிநீா் தொட்டி கோரி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் கோரிக்கை மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், மேல்நிலை குடிநீா்த்தொட்டி கட்டித் தரக் கோரியும், கடவூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை கடவூா் அருகே உள்ள பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சாந்துவாா்பட்டி கிராம மக்கள்... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில்: கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் வழங்கல்

கரூரில் தகிக்கும் வெயிலை சமாளிக்கும் விதமாக, கரூா் நகர உட்கோட்ட போக்குவரத்து காவலா்களுக்கு நீா்மோா் மற்றும் தொப்பி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கோடையின் சுட்டெரிக்கும் வெயிலிலும் போக்கு... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை -அமைச்சா்கள் வழங்கினா்

டிஎன்பிஎல் ஆலையில் பணியின்போது இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தித்... மேலும் பார்க்க

அதிகாரிகளை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா்கள் 2 போ் கைது

கரூா் மாவட்டம், குளித்தலையில் வழக்குரைஞா், அரசு அலுவலா் உள்ளிட்டோரை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை... மேலும் பார்க்க