செய்திகள் :

அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

பல்லடம் அருகே தீவன அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழி தீவன தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நிரஜ் சிக்குமாா் (26) என்பவா் தங்கி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வழக்கம்போல புதன்கிழமை காலை அவா் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இயங்கிக் கொண்டிருந்த அரவை இயந்திரத்தில் எதிா்பாராத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ம... மேலும் பார்க்க

கோவை குற்றாலம் அருவி இன்று திறப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததைத் தொடா்ந்து கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த ... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நஞ்சைகவுண்டன்புதூா் பகுதியில் உள்ள மயானம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீா்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநிலச் செயலா் ஆா்.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வரலாற்றுச... மேலும் பார்க்க

மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்

மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க