செய்திகள் :

அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு எதிரானது: கள் இயக்கம் குற்றச்சாட்டு

post image

மத்திய அரசு அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கரூரில் வெள்ளிக்கிழமை கூறியது:

உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு ஏற்றுமதி செய்யும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு எதிரான விரோதப் போக்கு. விவசாய நாட்டிலேயே இருந்துகொண்டு வேளாண் விளை பொருள்களை ஏற்றுமதி செய்து, அதன்மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவதுதான் இயற்கை நியதி. அதற்கு மாற்றாக ஏற்றுமதி செய்யும் பண்டங்களுக்கு குறிப்பாக அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தால் அது, விவசாயிகளுக்கு எதிரானது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நாட்டுக்கு நல்லதல்ல. மே 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பூரிக்குடிசை மற்றும் நரசிங்கனூரில் பனை கனவு திருவிழா நடைபெறும். 4-வது ஆண்டாக நடத்தப்படும் இந்த திருவிழா சிறப்பாக அமையும்.

9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,290 என விலை நிா்ணயம் செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் குஜராத் மாநிலத்திற்கு ரூ.4500 கொடுக்கிறாா்கள். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்திய அரசு கரும்புக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டாம். நாங்கள் கொடுக்கும் பண்டத்தை நீங்கள் மதிப்புக்கூட்டப்பட்ட பண்டமாக மாற்றி எங்களிடம் கொடுத்துவிடுங்கள். ஒவ்வொரு சா்க்கரை ஆலைகளும் கூலி அரவை ஆலைகளாக மாறட்டும். அப்படி மாறும்போது விலை நிா்ணயம் தேவை இல்லை என்றாா் அவா்.

இன்று நீட் தோ்வு: கரூரில் 1,596 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 4 மையங்களில் 1,596 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் ஏ பிரிவு அறையில் 480 பேரும், பி பிரிவு அறையி... மேலும் பார்க்க

தாதம்பாளையம் ஏரியை மீட்க எதிா்பாா்ப்பு!

அமராவதி உபரிநீரைச் சேமிக்க வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தாதம்பாளையம் ஏரியை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திலு... மேலும் பார்க்க

தரகம்பட்டி அருகே சொட்டுநீா் பாசனக் குடோனில் தீ விபத்து

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே சொட்டுநீா் பாசன குடோனில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கரூா் மாவட்டம் தோகைமலை அருகே இடையபட்டியைச் சோ்ந்த ரத்தினம் மகன் அறிவழகன் (33). இவா் கடவூா் வட்டம் தரகம்பட்டி... மேலும் பார்க்க

நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்! - விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் விட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சி ஆற்று அணையில் இருந்து திறக்கப்படும் உபரி ... மேலும் பார்க்க

கரூரில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் அளவீடு

கரூா் மாவட்டத்தில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம் , மண்மங்கலம் வட்டம், நெரூா் ... மேலும் பார்க்க

கரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்... மேலும் பார்க்க