அரியலூா்: கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
அரியலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா்(பொ) பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் காவல் ஆய்வாளா் ஆ. சித்ரா கலந்து கொண்டு பேசுகையில், படிக்கும் மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல், நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு, வீட்டுக்கும், சமுதாயத்துக்கு நற்பெயரை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக கல்லூரி நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. முன்னதாக, முனைவா் கி. பழனிசாமி வரவேற்றாா். நிறைவில், முனைவா் சு. சுமதி நன்றி கூறினாா்.
கீழப்பழுவூரில்: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் விநாயகா கல்வி நிறுவனம் சாா்பில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழப்பழுவூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கல்வி நிறுவனத்தின் தாளாளா் சி.பாஸ்கா், காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் ஆகியோா், போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
பேரணியானது, திருச்சி சாலை வழியாகச் சென்று, சீனிவாச நகரில் முடிவடைந்தது. பேரணியில் விநாயகா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி மாணவிகள், கல்வியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணா்வு வாசக அட்டைகளை கையில் ஏந்தி, முழக்கமிட்டவாறு சென்றனா்.
காவல் உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், பூமிவேல், அன்பழகன், செல்வகுமாா், தலைமைக் காவலா் அறிவேந்தன், அழகேசன், செந்தில்குமாா் மற்றும் கல்வியில் கல்லூரி முதல்வா் ம.மாலதி மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.