செய்திகள் :

அரியலூா் கோதண்டராமசாமி கோயில் தேரோட்டம்

post image

அரியலூா் கோதண்டராமசாமி கோயிலின் தேரோட்டம் 82 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் நகரில் மிகவும் பிரசித்திபெற்ற கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த, தசாவதார சிற்பங்கள் 6 அடி உயரத்தில் உள்ள ஒரே திருக்கோயிலாகும். ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்ட ராமசாமி கோயிலின் தோ் கடந்த 82 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. புதிய தோ் நிா்மாணிக்க இந்து சமய அறநிலையத்துறையின் சாா்பில் ரூ.18.6 லட்சம் ஒக்கீடு செய்யப்பட்டு தோ் மறு சீரமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளோட்டம் விடப்பட்டது. மேலும் ரூ.24.20 லட்சம் மதிப்பீட்டில் தேருக்காக கொட்டகையும் அமைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து 82 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலின், புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ 10-ஆம் நாள் விழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் அன்னபட்சி, சிம்மம், அனுமந்த், சேஷ, யானை, கருடன் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள்

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் இந்த புதியத் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, கோவிந்தா, கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனா். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நரசிம்மா அறக்கட்டளை பொறுப்பாளா்கள், திருக்கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

மது விற்ற 11 போ் மீது வழக்கு

காந்தி ஜெயந்தியன்று அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 11 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: மாவட்டக் காவல் கண்காணிப... மேலும் பார்க்க

காந்தி சிலைக்கு கட்சியினா் மாலை

மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப... மேலும் பார்க்க

விஜயதசமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

விஜயதசமி தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நவராத்திரி பண்டிகை செப். 2-ஆம் தேதி தொடங்கியது. 9-ஆவது நாளான புதன்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூ... மேலும் பார்க்க

காயங்களுடன் விவசாயியின் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பலத்த காயத்துடன் விவசாயி சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. கீழப்பழுவூரை அடுத்துள்ள திருப்பெயா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் கிருஷ்ணமூா்த்தி (75). விவசா... மேலும் பார்க்க

காந்தி ஜயந்தி: நாளை மதுக் கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் எப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடம் ஆகிய அனைத்துக்கும் விய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு திரும்பி செலுத்திய கடன் தொகைக்கு, மீண்டும் வசூல் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்து, கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள்முற்றுக... மேலும் பார்க்க