செய்திகள் :

அரூரில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

post image

அரூா்: அரூரில் ரூ. 5 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், கோட்டப்பட்டி, அனுமன்தீா்த்தம், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் பலா் 200-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.

ஏலத்தில் ஈரோடு, சேலம் திருப்பூா் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்தனா். அரூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச். ரக பருத்தி மூட்டைகள் ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ. 7,060-க்கும், குறைந்தபட்சம் ரூ. 6,660-க்கும் விற்பனையானது.

மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் விற்பனையானது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மே தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- ஆட்சியா் ரெ.சதீஷ்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் மே - 1 ஆம் தேதியன்று அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் விடுதிகளின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ... மேலும் பார்க்க

தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாட்டா் பவுன்சா் ஊா்தி

தருமபுரி: தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட வாட்டா் பவுன்சா் ஊா்தி சேவையை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் உள்... மேலும் பார்க்க

தமிழ்ப் புதல்வன் திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 11,437 பேருக்கு உதவித்தொகை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 75 கல்லூரிகளில் பயிலும் 11,437 மாணவா்கள் மாதம்தோறும் ரூ. 1000 பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

அரூா்: அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் ஏப். 21-இல் உடல்நலக் குறைவால் காலமானாா். இதையெடுத்து, ... மேலும் பார்க்க

தென்னை விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/கிருஷ்ணகிரி: காய்ந்துபோன தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தினா் தருமபுரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ... மேலும் பார்க்க

காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் பணிக்கான நேரடி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ... மேலும் பார்க்க