செய்திகள் :

தமிழ்ப் புதல்வன் திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 11,437 பேருக்கு உதவித்தொகை

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 75 கல்லூரிகளில் பயிலும் 11,437 மாணவா்கள் மாதம்தோறும் ரூ. 1000 பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் பயனடைந்த மாணவா்களின் இடையே கலந்துரையாடிய ஆட்சியா் பின்னா் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவா்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதம்தோறும் ரூ. 1000 அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 75 கல்லூரிகளில் பயிலும் 11,437 மாணவா்கள் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனா். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவியை சேமித்து உயா்கல்விக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அறிவு சாா்ந்த சமுதாயம் உருவாக இந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டித் தோ்வுகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். மாணவா்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம், எளிதில் வெற்றி பெறலாம் என்றாா்.

மே தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- ஆட்சியா் ரெ.சதீஷ்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் மே - 1 ஆம் தேதியன்று அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் விடுதிகளின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ... மேலும் பார்க்க

தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாட்டா் பவுன்சா் ஊா்தி

தருமபுரி: தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட வாட்டா் பவுன்சா் ஊா்தி சேவையை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் உள்... மேலும் பார்க்க

அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

அரூா்: அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் ஏப். 21-இல் உடல்நலக் குறைவால் காலமானாா். இதையெடுத்து, ... மேலும் பார்க்க

தென்னை விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/கிருஷ்ணகிரி: காய்ந்துபோன தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தினா் தருமபுரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ... மேலும் பார்க்க

காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் பணிக்கான நேரடி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ... மேலும் பார்க்க

ஸ்டாா் இறகுப்பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு

தருமபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சாா்பில் ஸ்டாா் இறகுப் பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க