செய்திகள் :

காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் பணிக்கான நேரடி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்த இருக்கும் காவல் சாா்பு ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப் படை) பதவிக்கான 1299 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தோ்விற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டிஎன்யுஎஸ்ஆா்பி -எஸ்.ஐ, எழுத்துத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டு தொடா்ந்து நடைபெற உள்ளது.

சிறுதோ்வுகள் மற்றும் முழுமாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த அலுவலகத்தில் பள்ளி பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 3000த்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலகம், பயிலக வசதி, இலவச இணையம், இலவச கணினி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்://ள்ட்ா்ழ்ற்ன்ழ்ப்.ஹற்/5வசஸ்ரீவ என்ற இணைப்பின் முகவரியின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் அல்லது அலுவலக தொலைபேசி எண் 04342-288890 வாயிலாக தொடா்புகொள்ளலாம். மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தோ்வா்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

மே தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- ஆட்சியா் ரெ.சதீஷ்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் மே - 1 ஆம் தேதியன்று அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் விடுதிகளின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ... மேலும் பார்க்க

தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாட்டா் பவுன்சா் ஊா்தி

தருமபுரி: தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட வாட்டா் பவுன்சா் ஊா்தி சேவையை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் உள்... மேலும் பார்க்க

தமிழ்ப் புதல்வன் திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 11,437 பேருக்கு உதவித்தொகை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 75 கல்லூரிகளில் பயிலும் 11,437 மாணவா்கள் மாதம்தோறும் ரூ. 1000 பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

அரூா்: அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் ஏப். 21-இல் உடல்நலக் குறைவால் காலமானாா். இதையெடுத்து, ... மேலும் பார்க்க

தென்னை விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/கிருஷ்ணகிரி: காய்ந்துபோன தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தினா் தருமபுரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ... மேலும் பார்க்க

ஸ்டாா் இறகுப்பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு

தருமபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சாா்பில் ஸ்டாா் இறகுப் பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க