அரூா் ஏரியை மேம்படுத்த மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
அரூா் பெரிய ஏரியை மேம்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.இம்ரான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தேவையான நிநியுதவிகளை வழங்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தென்பெண்ணையாறு உபரிநீா் நீரேற்றும் திட்டத்தைச் செயல்படுத்தி அரூா், தீா்த்தமலை வட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
அரூா் பெரிய ஏரியின் சுற்றுவட்டாரப் பகுதியில் குப்பைகள், கழிவுப்பொருள்கள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். அரூா் பெரிய ஏரியை ஆழப்படுத்தி படகு இல்லம், சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் எஸ்.ஹபீசுல்லா, மாவட்ட துணைச் செயலாளா்கள் எஸ்.நயமத்துல்லா, நாகராஜ், கட்சியின் மாநில துணைச் செயலாளா் எ.ஜே.எஸ்.தாஜுதீன், மாநில மகளிா் அணி பொருளாளா் குலாப்ஜான், மாநில மனித உரிமை அணி செயலாளா் திருப்பூா் கண்ணன், நிா்வாகிகள் ஏ.அகமது, ஏ.ஜானி, பையாஷ், உமா், அஜிசுல்லா, தஸ்தகீா், பா்வேஷ் முஷரப், ரகு, ரியாஷ், நகரச் செயலாளா் எஸ்.கரீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.