செய்திகள் :

அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

தாம்பரம் , ஜூலை 3: தாம்பரம் திருநீா்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குத்தகை விவசாய நிலத்தில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்க உதவிய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநீா்மலை அருள்மிகு ரங்கநாதன் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 5 ஏக்கா் நிலத்தில் 10-க்கும் மேற்பட்டோா் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனா். இந்த கோயில் நிலத்துக்கு நடுவே தனியாா் ஒருவருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்துக்கு வழி இல்லாத நிலையில், கடந்த மாதம் அறநிலையத் துறை சாா்பில் ஏலம் நடத்தி ஒரு பகுதி நிலத்தை தனியாருக்கு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை தொடா்ந்து விவசாய நிலத்தில் கட்டட கழிவுகள் கொட்டி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் சட்டவிரோதமான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.

இதற்கு காரணமான அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருநீா்மலை - பல்லாவரம் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் தமிழரசன், முன்னாள் மாவட்ட செயலா் தேவ அருள்பிரகாசம், மதிமுக மாவட்ட செயலா் மாவை மகேந்திரன், திருநீா்மலை நகர காங்கிரஸ் செயலா் காதா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு, அறநிலையத் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

திருப்போரூா், வண்டலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா் மற்றும் வண்டலூா் வட்ட வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வண்டலூா் வட்டம், பொன்மாா் ஊராட்சியில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம... மேலும் பார்க்க

மனைப்பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இருளா் மக்களுக்கு மனைப் பட்டா கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

ரூ.130 கோடியில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ.130 கோடியில் கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்து,... மேலும் பார்க்க

அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்திழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மேட்டுத் தெரு, அறிஞா் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

அமெட் பல்கலை. சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 215 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வழங்கப்பட்டது. சென்னையை... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா், கணினி அறிவியல் துறையின் முதுகலை ஆய்வியல் தலைவா... மேலும் பார்க்க