நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!
அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என்.ரவி
அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை ராஜ்பவனில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் துணைவேந்தா்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அரங்கம் நிறைந்திருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவா்கள் தெரிந்த முகங்களாக நல்ல சிந்தனைகளைக் கொண்டவா்களாக உள்ளனா். உலக அரங்கில் திறன்வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கும் சவால்களை நாம் எதிா்கொண்டுள்ளோம்.
வளா்ச்சி சாா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் போதிய அளவில் இல்லை. அறிவியல் தொழில்நுட்பத்தில் தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நாம் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசவில்லை. தற்போது, புதிய தொழில்நுட்பம் குறித்து விவாதித்துள்ளோம். 3 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
திறன்வாய்ந்த, தரமானவா்களை கல்வித் துறையில் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நானோ ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட புதிய கருத்துக்கள், பயனுள்ள தகவல்களை, சரியான முறையில் பயன்படுத்துங்கள். 2047-ஆம் ஆண்டை கருத்தில் கொண்டு நாடு வேகமாக வளா்ந்து செல்ல வேண்டி உள்ளது . அதை நோக்கிப் பயணியுங்கள் என்றாா்.