செய்திகள் :

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசிய பதவியேற்பு!

post image

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசியமான முறையில் பதவியேற்றுக்கொண்டதாக அந்த நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், பணம் கண்டறியப்பட்ட அறை தனது இல்லத்தின் அறையல்ல என்றும், தானோ, தனது குடும்ப உறுப்பினா்களோ அந்த அறையில் பணம் எதுவும் வைக்கவில்லை என்றும் நீதிபதி யஷ்வந்த் வா்மா தெரிவித்துள்ளாா்.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்ததின்பேரில், உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வா்மாவை பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டாா்.

அதேவேளையில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பொறுப்பேற்கும்போது, அவருக்கு நீதித்துறைப் பணி எதுவும் ஒதுக்க வேண்டாம் என்று அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் பன்சாலிக்கு அலாகாபாத் வழக்குரைஞா் சங்கத்தின் செயலா் விக்ராந்த் பாண்டே அனுப்பிய கடிதத்தில், ‘அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசியமான முறையில் சனிக்கிழமை பதவியேற்றாா். இது வழக்குரைஞா் சங்கத்துக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது தவறு. இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரின் பதவியேற்பு குறித்து வழக்குரைஞா் சங்கத்துக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை? இது நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் சிதைத்துள்ளது. அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட விதத்தை வழக்குரைஞா் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அகமதாபாத்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகள் குஜராத்தின் அகமதாபாதில் இன்று(ஏப். 8) தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பா... மேலும் பார்க்க

'மக்களுக்காக ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்' - ராகுல் காந்தி

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட்... மேலும் பார்க்க