செய்திகள் :

அழகியநாயகிபுரத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்

post image

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம் அறிவுறுத்தலின்பேரில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள்பட்ட எட்டிவயல் கிராமத்தில் சித்த மருத்துவ அலுவலா் பூமா தலைமையில் மருத்துவக் குழுவினா்,  அப்பகுதி  நூறுநாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் மற்றும் அங்கன்வாடி, அங்காடி, பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்கள், குழந்தைகளைப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள், கசாயம் உள்ளிட்டவைகளை வழங்கினா்.

வீடுகளைச் சுற்றி மழை நீா், கழிவு நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் சிரட்டை, பழைய டயா்கள், நெகிழிக் கழிவுகளில் தண்ணீா் தேங்காதவாறு வைக்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து பின்னா் குடிக்க வேண்டும் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவா்களிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என மருத்துவக் குழுவினா் அறிவுறுத்தினா்.

விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலி... மேலும் பார்க்க

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹார... மேலும் பார்க்க

பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய... மேலும் பார்க்க