செய்திகள் :

அவதூறு சட்டத்தை குற்றமற்றதாக்கும் நேரம் வந்துவிட்டது: உச்சநீதிமன்றம்

post image

குற்ற அவதூறு வழக்கில் விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி சுதந்திரமான ஊடகவியலுக்கான அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ‘அவதூறு சட்டத்தை குற்றமற்ாக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டது.

சுதந்திரமான ஊடகவியலுக்கான அறக்கட்டளைக்குச் சொந்தமான ‘தி வயா்’ செய்தி வலைதளத்தில் வெளியான செய்திக்கு எதிராக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் அமிதா சிங் சாா்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த செய்தி வலைதளம் மற்றும் அதன் அரசியல் பிரிவு ஆசிரியா் அஜோய் ஆசீா்வாத் மகாபிரசஸ்தாவுக்கு எதிராக இந்த அவதூறு வழக்கை அவா் தொடா்ந்தாா்.

அதில், தனது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பிரசாரத்தை இந்தச் செய்தி வலைதளம் மேற்கொள்வதாக அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தில்லி விசாரணை நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு செய்தி வலைதளத்தின் அரசியல் பிரிவு ஆசிரியா் மற்றும் நிா்வாகிகளுக்கு அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை தில்லி உயா் நீதிமன்றம் கடந்த 2023-இல் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் அண்மையில் அவா்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பியது. இதை உயா் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிா்த்து அந்தச் செய்தி வலைதளம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘அவதூறு சட்டத்தைக் குற்றமற்ாக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்ட நீதிபதி சுந்தரேஷ், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமிதா சிங்குக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க