செய்திகள் :

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

post image

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

தான் அரசியலில் நுழைந்து, மக்களவை உறுப்பினரான போது, மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜியை முதல் முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, நான் அவரிடம் சென்று, வணக்கம் வைத்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் புகைபிடிப்பவர்களுக்காக ஒரு அறை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

இதைக் கேட்டதும் அவர் என்னைத் திட்டினார். இதுதான் ஒரு அவைத் தலைவருடனான உங்களது முதல் சந்திப்பு. இதைக் கேட்கவா என்னிடம் வந்தீர்கள் என்று கேட்டார். அன்றைய தினம், எனக்கு நன்றாக திட்டு விழுந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. இப்படியொரு பதவியில் இருப்பவர்களை சந்திக்க வேண்டும் என்றால், மிக முக்கியமான கோரிக்கைகளுடன்தான் சந்திக்க வேண்டும், சாதாரண விஷயங்களுக்காக அல்ல என்பதை புரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரிஜிஜு, அரசியல் எதிர்க்கட்யினர் யாரும், எதிரிகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தனது அரசியல் வாழ்க்கை முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளின் இருக்கையிலேயே கழிந்தது என்றும் கூறினார்.

Kiren Rijiju shares how he got scolded for making his first request to the Speaker

இதையும் படிக்க. .. வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க