செய்திகள் :

அஸ்ஸாம்: சிறைக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

post image

அஸ்ஸாம் மாநிலத்தின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் சிறைக் காவளர்களாகப் பணியாற்றுபவர்கள் பிரஜேந்திர கலிதா (50) மற்றும் ஹரேஷ்வர் கலிதா (47).

இவர்கள் இருவரும் இரவில் சிறைச் சாலைக்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, நள்ளிரவு 1 மணியளவில் அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வந்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அந்தப் பெண்ணைச் சிறைச் சாலைக்குள் இழுத்துச் சென்று இரண்டு காவலர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

இதை அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் பார்த்து, இருவரையும் சம்பவ இடத்திலேயே பிடித்திருக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், இருவரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.

இரண்டு காவலர்களின் செயல், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், பெண் உரிமை சார்ந்து இயங்கக்கூடியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, ``ஸ்ரீபூமி சதார் காவல் நிலைய காவலில் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதிகாலை 1:00 மணி முதல் 1:30 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.

காவல்துறை
காவல்துறை

தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்தை அடைந்தோம். பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டது.

விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது அருகிலுள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க