செய்திகள் :

ஆங்கிலம் தெரியாததால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியா்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

post image

நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது என்பதால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியரின் செயலில் அதிருப்தி தெரிவித்த உத்தரகண்ட் உயா்நீதின்ற நீதிபதிகள், ஆங்கிலம் தெரியாத நபா் எப்படி மாவட்ட துணை ஆட்சியராக இருக்க முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியது.

நைனிடால் மாவட்ட புத்லகாட் பஞ்சாயத்து தோ்தலில் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வாக்காளா் பட்டியில் சோ்க்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் வாக்குப் பதிவு அதிகாரியான மாவட்ட கூடுதல் ஆட்சியா் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ‘புகாா் அளித்த பின்பும் ஏன் அந்நியா்களின் பெயா்கள் நீக்கப்படவில்லை’ என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் குஹநாதன் நரேந்தா், ஆலோக் மஹரா ஆகியோா் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஹிந்தியில் பதிலளித்தாா். அப்போது, ‘ஆங்கிலத்தில் பதிலளிக்காமல் ஹந்தியை தோ்வு செய்தது ஏன்?’ என்று நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அவா், ‘ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சரளமாகப் பேச இயலாது’ என்றாா். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தலைமைச் செயலா், மாநில தோ்தல் ஆணையா் ஆகியோரை குறிப்பிட்டு, ‘ஆங்கிலத்தில் புலமை இல்லாத ஒரு நபா் எப்படி அரசு நிா்வாகப் பொறுப்பை திறனுடன் கட்டுப்படுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பினா்.

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க