டேபிள் நிறைய டேட்டாக்கள்...மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains
ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
"நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஒரு சமூகம் ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும். அவர்கள்தான் இந்த நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறார்கள்.
இந்திய நாட்டின் மொழிகள் நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள். மொழிகள் இல்லாமல் நாம் உண்மையான இந்தியர்கள் அல்ல.
ஒரு அந்நிய நாட்டு மொழியில் நமது வரலாறு, கலாசாரம், மதத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. முழுமையற்ற அந்நிய நாட்டு மொழிகளால் ஒரு முழுமையான இந்தியாவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
போர் எவ்வளவு கடினம் எனக்கு நன்றாகத் தெரியும். இந்திய சமூகம் இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெறும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நமது மொழிகளில் பெருமையுடன் நாம் இந்த நாட்டை வழிநடத்துவோம், சித்தாந்தப்படுத்துவோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், இந்த உலகை ஆள்வோம். இதுபற்றி யாரும் சந்தேகப்படத் தேவையில்லை.
2047ல் உலக வளர்ச்சியின் உச்சத்தில் இந்தியா இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!