செய்திகள் :

ஆசிய கோப்பை: இலங்கைக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய வங்கதேச அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. முதல் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹாசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் இமோன் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதன் பின், தௌகித் ஹிரிடாய் 8 ரன்களிலும், மஹேதி ஹாசன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வங்கதேசம் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

நிதானமாக விளையாடிய கேப்டன் லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து, ஜேக்கர் அலி மற்றும் ஷமிம் ஹொசைன் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய ஷமிம் ஹொசைன் 34 பந்துகளில் 42 ரன்களும் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ஜேக்கர் அலி 34 பந்துகளில் 41 ரன்கள் (2 பவுண்டரிகள்) எடுத்தும் களத்தில் இருந்தனர். இறுதியில் வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நுவான் துஷாரா மற்றும் துஷ்மந்தா சமீரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

Bangladesh against Sri Lanka in the Asia Cup cricket series, scored 139 runs for the loss of 5 wickets.

இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் நாளை மோதல்; கௌதம் கம்பீர் கொடுத்த முக்கிய அறிவுரை!

பதும் நிஷங்கா, கமில் அதிரடி.! ஆசியக் கோப்பையை வெற்றியுடன் துவங்கிய இலங்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. 53 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை, ஜாகா் அலி, ஷமிம் ஹுசைன் ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் நாளை மோதல்; கௌதம் கம்பீர் கொடுத்த முக்கிய அறிவுரை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் த... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இலங்கை... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

ஆஸ்திரேலியா உள்பட எந்த ஒரு வலிமையான அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியி... மேலும் பார்க்க

இலங்கை அணி ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனா? என்ன சொல்கிறார் சரித் அசலங்கா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியன் இலங்கை அணி என அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 13) நடைபெறும் போட்டியில் இலங... மேலும் பார்க்க

விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கக் கூடாது: தலிபான் தலைவர்

இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கக் கூடாதென தலிபான் தலைவர் பேசியது கவனம் ஈர்த்து வருகிறது. விராட் கோலி 50 வயதுவரை விளையாட வேண்டுமென்றும் அவர் பேசியது ரசிகர்கள் மத்த... மேலும் பார்க்க