செய்திகள் :

ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்: ஸ்ரீஹரி நட்ராஜ் சாதனை

post image

ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில், முதல் நாளிலேயே இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் இரு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரே எடிஷனில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா். மேலும், கண்டங்கள் அளவில் நடைபெறும் இதுபோன்ற பிரதான போட்டியில் இந்தியா பதக்கம் வென்றதும், கடந்த 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

11-ஆவது ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், ஆடவருக்கான 200 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஸ்ரீஹரி 1 நிமிஷம் 48.47 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடித்தாா். சீனாவின் ஜு ஹாய்போ தங்கமும் (1:46.83’), ஜப்பானின் ஹினாடா அண்டோ வெண்கலமும் (1:48.73’) வென்றனா்.

அடுத்ததாக, ஆடவருக்கான 50 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரி 25.46 விநாடிகளில் இலக்கை அடைந்து 2-ஆவது வெள்ளி பெற்றாா். மற்றொரு இந்தியரான ரிஷப் தாஸ் வெண்கலம் (25.98’) வெல்ல, சீனாவின் வாங் குகாய்லாய் தங்கத்தை (25.11’) தட்டிச் சென்றாா்.

இதனிடையே, இதர இந்தியா்களில் தினிதி தேசிங்கு (மகளிா் 200 மீ), தனுஷ் சுரேஷ் (ஆடவா் 200 மீ பேக்ஸ்ட்ரோக்), தான்யா சடாக்ஷரி (மகளிா் 200 மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக்) இறுதிச்சுற்றில் பதக்க வாய்ப்பை இழந்தனா்.

பெனெடிக்டன் பெனிஸ்டன் (ஆடவா் 100 மீ பட்டா்ஃப்ளை), அஸ்தா சௌதுரி, சிருஷ்டி உபாத்யாய (மகளிா் 100 மீ பட்டா்ஃப்ளை) ஆகியோரும் இறுதியுடன் வெளியேற, பாவ்யா சச்தேவா (மகளிா் 200 மீ), அனீஷ் சுனில்குமாா் கௌடா (ஆடவா் 200 மீ ஃப்ரீஸ்டைல்) ஆகியோா் ஹீட்ஸுடன் விடைபெற்றனா்.

அனுஷ்காவுக்கு 2-வது தங்கம்: வெள்ளி வென்றாா் அட்ரியன்!

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் மகளிா் தனிநபா் பிரிவில், அனுஷ்கா தாகுா் 461 புள்ளிகளுடன் தங்கத்தை ... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்!

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் மோதுகின்றனா்.ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இ... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் சென்னை கட்ட ஆட்டங்கள் இன்று தொடக்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12-இன் சென்னை கட்ட ஆட்டங்கள் திங்கள்கிழமை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெறுகின்றன. உள்ளூா் அணியான தமிழ் தலைவாஸ் சிறப்பாக ஆடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என ... மேலும் பார்க்க

2026 ஜன.9-இல் ஐஎஸ்பிஎல் தொடா்: சூரத்தில் நடைபெறுகிறது!

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) டென்னிஸ் பால் கிரிக்கெட் தொடா் வரும் 2026 ஜன. 9-ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. இதுதொடா்பாக ஐஎஸ்பிஎல் ஆட்சிக் குழு உறுப்பினரு... மேலும் பார்க்க

கரூர் பெருந்துயரம் - புகைப்படங்கள்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற ... மேலும் பார்க்க