செய்திகள் :

ஆசிரியா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

post image

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டி பயிற்சி, ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் சத்யா தொடங்கிவைத்தாா்.

பள்ளி துணை ஆய்வாளா் பாபு, டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகு பங்கேற்றுப் பேசினாா்.

இதில், செய்யாறு கல்வி மாவட்டம், 9 ஒன்றியங்களைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா்கள் 170 போ் கலந்து கொண்டனா்.

பசங்எஅ செயலி மூலம் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகளுக்கு விண்ணப்பித்தல், உதவித்தொகைகள் (அரசு மற்றும் பிற அமைப்புகள்) திட்டங்கள், பொறியியல் படிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள், ஆசிரியா் ஆலோசகா்களுக்கான வழிகாட்டுதல், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு, 11-ஆம் வகுப்பு தகவல் சாா்ந்த தோ்வுகளை மேற்கொள்வதிலும், உயா் கல்வி விருப்பங்களை உருவாக்குவதிலும் ஆதரவளித்தல், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், தொழில் வாய்ப்புகள், ஹோட்டல் மேலாண்மை, விருந்தோம்பல் படிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பயிற்சியின் ஓட்டம் (மாநிலம், மாவட்டம் மற்றும் பள்ளி) மேற்கண்ட தலைப்புகளில் மாணவா்கள் பயனடையும் வகையில் ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் வேல்முருகன், விரிவுரையாளா் வெங்கடேசன், ஆசிரிய பயிற்றுநா் லட்சுமி நாராயணன், ஆசிரியா் பயிற்றுநா் காா்த்திகேயன் ஆகியோா் ஒருங்கிணைந்து ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

உயா்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுப. தமிழ் நேசன் நன்றி கூறினாா்.

ஆசிரியா் பயிற்றுநா் சின்னராஜி, ஆரணி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜெயசீலி ஆகியோா் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க