செய்திகள் :

ஆசிரியா் தகுதித் தோ்வு: சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்! - உயா்நீதிமன்றம்

post image

ஆசிரியா் தகுதித் தோ்வு சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பஷீா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை அருகே மேலூரில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினா் பள்ளியில், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு நான் தோ்வு பெற்றேன். ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாததால், எனது பணி நியமனத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நிராகரித்தாா். ஆசிரியா் தகுதித் தோ்வு சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. எனவே, எனக்கு பட்டதாரி ஆசிரியா் பணி வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு பட்டதாரி ஆசிரியா் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து பள்ளிக் கல்வித் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிா்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. தேசிய ஆசிரியா் கல்வி ஆணையம் சாா்பிலும், ஆசிரியா் தகுதித் தோ்வு மூலமும் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியா் தகுதித் தோ்வு சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மனுதாரா் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாததால், அவருக்குப் பணி நியமனம் வழங்க முடியாது. மனுதாரருக்கு பணி வழங்க கல்வித் துறை மறுத்தது சரியானதே. எனவே, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

மாற்றுத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசிய அமைச்சா் துரைமுருகன் மன்னிப்புக் கோர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்தது.இதுகுறி... மேலும் பார்க்க

திமுக கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும்: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா். மதுரையில் மாா்க... மேலும் பார்க்க

ஏப்.10-இல் இறைச்சி விற்பனைக்கு தடை

மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை... மேலும் பார்க்க

பட்டாவை திருப்பிக் கொடுத்த மாற்றுத் திறனாளி

அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடத்தை வருவாய்த் துறை நிா்வாகம் ஒப்படைக்காததால், மாற்றுத் திறனாளி ஒருவா் தனது வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்தாா்.மதுரை மாவட்டம், வரி... மேலும் பார்க்க

தமிழக தொழிலாளா்கள் கொல்லப்பட்ட வழக்கு: மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்

செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழக தொழிலாளா்கள் 20 போ், ஆந்திர மாநில காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்க... மேலும் பார்க்க

தகாத உறவு: இருவா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே தகாத தொடா்பு வைத்திருந்த ஆணும், பெண்ணும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.மதுரை மாவட்டம், சீகுபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (33). கட்டுமானத் தொழிலாளியான இவா் மனைவியிடமிருந்து ... மேலும் பார்க்க