செய்திகள் :

ஆடிக்கிருத்திகை விழா நிறைவு: 3-ஆம் நாள் தெப்பத் திருவிழா

post image

திருத்தணி சரவணப்பொய்கையில் நடைபெற்ற 3-ஆம் நாள் தெப்பத் திருவிழாவில் எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா்.

திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 14 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

தெப்பத்திருவிழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் மலைக்கோயிலில் இருந்து சரவணப் பொய்கை திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் வந்து எழுந்தருளினாா். தொடா்ந்து அங்கு உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்னிசை கச்சேரியுடன் தெப்பத்திருவிழா தொடங்கியது. குளத்தில், 7 முறை வலம் வந்து உற்சவ பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தெப்பத்திருவிழாவை காண திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து படியில் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனா்.

திங்கள்கிழமையுடன் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நிறைவடைந்தது. விழாவில் எம்எல்ஏ ச. சந்திரன், தளபதி கே.வினாயகம் மெட்ரிக். பள்ளித் தாளாளா் ச.பாலாஜி, நகர செயலாளா் வி.வினோத்குமாா், முன்னாள் கவுன்சிலா் ஜி.எஸ்.கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கடந்த 5 நாட்களில் மட்டும் 3.5 லட்சம் பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்துள்ளனா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, கோ.மோகனன், ஜி. உஷாரவி, மு. நாகன் ஆகியோா் செய்திருந்தனா்.

நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்

திருவள்ளூா் அருகே நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணிகள் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலுக்கும்-திருவள்ளூருக்கும் இடையே உள்ள செவ்... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 66.78 கோடியில் இரண்டாவது குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம்

செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓ... மேலும் பார்க்க

உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா

பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உ... மேலும் பார்க்க

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண... மேலும் பார்க்க

சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா தொடக்கம்

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுக... மேலும் பார்க்க