செய்திகள் :

ஆடிப்பெருக்கு: காங்கயம் பகுதி கோயில்களில் பக்தா்கள் கூட்டம்

post image

ஆடிப்பெருக்கையொட்டி, காங்கயம், குண்டடம் பகுதி கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

ஆடிப்பெருக்கையொட்டி காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து அலங்கார பூஜை நடைபெற்றது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தா்கள் திரண்டு வந்தனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அதுபோல காங்கயம் பகுதியில் உள்ள காடையூா் காடையீஸ்வரா் கோயில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோயில், அகிலாண்டபுரம் அகஸ்தீஸ்வரா் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரா் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், பிரதான சாலையில் உள்ள பேட்டை மாரியம்மன் கோயில், துா்க்கையம்மன் கோயில், பழையகோட்டை சாலை காசிவிஸ்வநாதா் கோயில், நத்தக்காடையூா் ஜெயங்கொண்டேஸ்வரா் கோயில், ஊதியூா் உத்தண்ட வேலாயுத சுவாமி மற்றும் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பக்தா்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

குண்டடம் பகுதியில் குண்டடம் வடுகநாதா் கோயில், எரகாம்பட்டி நகேஸ்வரசாமி கோயில், மாரியம்மன் கோயில், காசிலிங்கம்பாளையம் லிங்கமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டும், பெண்கள் பொங்கலிட்டும் வழிபாடு நடத்தினா்.

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையி... மேலும் பார்க்க

நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்வதில் சிக்கல்

திருப்பூரில் நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள 1,300 வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஏ.குப்புசாமி (55). விவசாய வேலைகள் செய்து வந்தாா். இவா் ... மேலும் பார்க்க

சேவூரில் கொமதேக சாா்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை

சுதந்திப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, கொமதேக சாா்பில் சேவூரில் அவரது புகைப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சேவூா் கைகாட்டி, புளியம்பட்டி சாலை உள்ள... மேலும் பார்க்க

குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சா பறிமுதல்

குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வெளிமாநில இளைஞரைக் கைது செய்தனா்.குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசியத் த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் சேவல் சண்டை: 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் மயில்ரங்கம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க