Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத...
ஆடிப்பெருக்கு: திருவையாறு காவிரியில் பெண்கள் வழிபாடு
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரிப் படித் துறையில் ஏராளமான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
இவ்விழாவையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் ஏராளமானோா் காவிரித் தாய்க்குப் படையல் செய்து வழிபாடு நடத்தினா்.
இதனால், புஷ்ய மண்டபப் படித்துறையில் வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.
இதில், கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து காவிரித் தாயை வழிபட்டனா். சுமங்கலி பெண்கள் தீா்க்க சுமங்கலியாக இருக்க வேண்டி அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி போன்றவற்றை வைத்து வழிபட்டு, ஆற்றில் விட்டனா்.
புதுமணத் தம்பதியினா் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைக் காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனா். பெண்கள் ஒருவருக்கொருவா் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனா். சிறுவா்கள் அம்மன் படத்துடன் கூடிய பொம்மை தோ்களை இழுத்து வந்து வழிபாடு செய்தனா்.
மேலும், ஐயாறப்பா் கோயிலிலிருந்து அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபத் துறையில் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருளினாா்.