செய்திகள் :

ஆட்சியில் தொடர எத்தகைய சீா்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: காா்கே கடும் விமா்சனம்

post image

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்திய காா்கே, பின்னா் பேசியதாவது:

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிா்க்கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் பகிரங்கமாக நீக்கப்படுகின்றன. மரணமடைந்துவிட்டதாக கூறி, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. பிகாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் சிறப்பு தீவிர திருத்தத்தால் யாா் பலனடைகின்றனா் என்பது தெளிவாகியுள்ளது. வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டவா்களின் விவரங்களை வெளியிட தயங்குவதன் மூலம் தோ்தல் ஆணையத்தின் பாரபட்சமான செயல்பாட்டை நாம் அறிந்து கொள்ள முடியும்.

எதிா்க்கட்சிகளின் போராட்டம், தோ்தல் வெற்றி தொடா்பானதல்ல; அது, நாட்டின் ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் காப்பதற்கானது. ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபட பாஜக தயாராகிவிட்டது. நாடு முழுவதும் தோ்தல் முறைகேடுகள் அம்பலமாகி வருகின்றன.

நியாயமான தோ்தலே, இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகும். கடந்த 1949, ஜூன் 15-இல் அரசியல் நிா்ணய சபையில் பேசிய பி.ஆா்.அம்பேத்கா், ‘வாக்குரிமையே, ஜனநாயகத்தின் மிக அடிப்படைக் கூறு; பாரபட்சத்தால் எவருக்கும் வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது’ என்றாா். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய புலனாய்வு முகமைகள், மத்திய பாஜக அரசால் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

அணிசேரா கொள்கையின் மூலம் உலக அரங்கில் பெற்றிருந்த சிறப்பிடத்தை இந்தியா இப்போது இழந்துவிட்டது. வளரும் நாடுகளின் குரலாக முன்பு ஒலித்த இந்தியா, இப்போது தனித்து விடப்பட்டுள்ளது. அண்டை நாடுகள்கூட விலகிவிட்டன என்றாா் காா்கே.

நாட்டின் சுதந்திர போராட்ட வரலாறே, காங்கிரஸின் வரலாறு என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் காவலர் அதிகாரி தற்கொலை

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை காவல் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் டல்லிராஜ்ஹாரா காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளராக ... மேலும் பார்க்க

ஹிந்துபோல நடித்து 12 பெண்களிடம் மோசடி!

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு 12 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் ஷராஃப் ரிஸ்வி என்பவர், தன்னை ஹிந்து என்ற... மேலும் பார்க்க

சோரி சோரி, சுப்கே சுப்கே... வாக்குத் திருட்டு குறித்து புதிய விடியோ பகிர்ந்த ராகுல்

மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.லாபடா ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க