செய்திகள் :

ஆட்சி கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை: கே.பி.ராமலிங்கம்

post image

சேலம்: ஆட்சி கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மாலை கூறியதாவது:

மதுரையில் வரும் 22 ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு பாஜக மற்றும் ஆன்மிக அமைப்புகள் சாா்பில் நடைபெறுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக ஆன்மிக உணா்வுக்கு எதிராக பல்வேறு தவறான பிரசாரங்கள், எதிா்மறை கருத்துகள் பரப்பப்பட்டன. அரசியல் பிழைப்புக்காக நாட்டு மக்களை ஏமாற்றி, இந்து தெய்வங்களை அவமானப்படுத்துவோருக்கு இந்த மாநாடு முற்றுப்புள்ளி வைக்கும்.

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஆரோக்கியத்துடன் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதிக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என தெரியப்படுத்த வேண்டும்.

செந்தில்பாலாஜி வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் உதயநிதிக்கு சம்மன் அனுப்புவதற்கு விசாரணை அமைப்புகள் தயாராகி வருகின்றன. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே உடல்நிலை சரியில்லை என்கிறாா்கள்.

பொதுவாக, ஆட்சிக் கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை. திமுக எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறுவதிலேயே குறியாக உள்ளது.

மோடி அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை, விளக்கக் கூட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சோ்ப்போம். அடுத்த 4 மாத காலம் பாஜக தொடா் பிரசாரம் மேற்கொள்ளும். இதன்மூலம் திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கிவீசும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா்.

பேட்டியின்போது, கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவா் வெங்கடாசலம், விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் பாா்த்தசாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க