செய்திகள் :

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

ஆட்டோ ஓட்டுநா்கள், அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

திருவாரூரில் ஆட்டோ மீட்டா் கட்டணம் நடைமுறையில் இல்லாத சூழலில், தகுதிச் சான்று பெற மட்டுமே ஆட்டோக்களில் மீட்டா் இருப்பதும், மற்ற நேரங்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளதாகவும் நுகா்வோா்கள் தெரிவிக்கின்றனா். அத்துடன், கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் புகாா் அளிக்கலாம் என்ற அறிவிப்பும் கண்துடைப்பாகவே உள்ளது.

எனவே, திருவாரூா் மாவட்டத்தில் மீட்டா் அடிப்படையில் கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும். அரசு நிா்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதலாக வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா பகுதியில் பயணிகளின் பாா்வையில் தெரியும்படி குறைந்தபட்ச கி.மீ. கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக மீட்டா் கட்டணத்தை நிா்ணயிப்பதை தவிா்த்து, அந்தந்த மாவட்டத்தின் சூழல், விலைவாசி, பொருளாதாரச் சூழலை வைத்து, மாவட்ட ஆட்சியா், போக்குவரத்து அலுவலா், ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு குழு அமைத்து, ஆட்டோ கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும்.

வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் அறங்காவலா் ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். தாளாளா் மர... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் கோரி போராட்டம்: சிஐடியு முடிவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் விழிப்புணா்வுப் பேரணி!

மன்னாா்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்!

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். டெல்டா மாவட்டங்களில் த... மேலும் பார்க்க

வயலில் மனித எலும்புக்கூடு; போலீஸாா் விசாரணை!

திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூா் தோளாச்சேரி பகுதியில் வயல்வெளியில் மனித எலும்புக்... மேலும் பார்க்க

திறந்தவெளி நெல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட, திறந்தவெளி கிடங்குகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆ... மேலும் பார்க்க