செய்திகள் :

ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் காயம்

post image

போடி அருகே திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், போடி பெருமாள் கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ராமராஜ் (53). இவரது மனைவி இந்திரஜோதி (50), மகள் ஜஸ்விகா (2). இவா்கள் மூவரும் போடி அம்மாபட்டியிலிருந்து பெருமாள்கவுண்டன்பட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, எதிரே வந்த டிராக்டா் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ராமராஜ், இந்திரஜோதி, ஜஸ்விகா, ஆட்டோ ஓட்டுநரான பெருமாள்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் ரகுநாதன் (47) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் டிராக்டரை ஓட்டி வந்த போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் வீரபெருமாள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக் மீது பேருந்து மோதியதில் முதியவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க

தேனியில் ஆக.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோடாங்கிபட்டி திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேவதானப்பட்டி அருகே உள்ள டி. காமக்காபட்டியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவா் கைது

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாக இருந்தவரின் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பிரவீன்க... மேலும் பார்க்க

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை; நோயாளிகள் அவதி

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிசிக்சை பெறும் நிலை உள்ளது. உத்தமபாளையத்தில் வட்டாரத் தலைமை அரசு மருத்துவமனை கடந்... மேலும் பார்க்க