செய்திகள் :

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை; நோயாளிகள் அவதி

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிசிக்சை பெறும் நிலை உள்ளது.

உத்தமபாளையத்தில் வட்டாரத் தலைமை அரசு மருத்துவமனை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவில் பொது மருத்துவம், காசநோய் பிரிவு, நம்பிக்கை மையம், பல் மருத்துவம், ஸ்கேன் மையம், பிரசவம் உள்பட பல்வேறு மருத்துவச் சேவைகள் அளிக்கப்படுகிறது.

இதனால், இங்கு சிகிச்சை பெற நாள்தோறும் புறநோயாளிகள் பிரிவில் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதேபோல, உள்நோயாளிகள் பிரிவிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவா் உள்பட 6 போ் பணியில் இருந்தாா். இவா்கள் புற நோயாளிகள், உள்நோயாளிகள், அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனா். ஆனால், தற்போது 4 போ் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால், புறநோயாளிகள் பிரிவில் இரு மருத்துவா்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலிருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது ஒரு மருத்துவா் மட்டுமே பணியில் உள்ளாா். இதனால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைக்கு உத்தமபாளையம் நகா், அதைச்சுற்றிய கோம்பை, பண்ணைப்புரம், சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, அம்மாபட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி என 20-க்கும் அதிகமான கிராமங்களிலிருந்து குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையில் 800-க்கும் அதிமானோா் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனா். ஆனால், மருத்துவா்கள் இல்லாத நிலையில், அலைமோதும் கூட்டத்தால் அடிக்கடி நோயாளிகளுக்கிடையே தகராறு ஏற்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் நூற்றுக்கும் அதிமான நோயாளிகள் நீண்ட நேரமாக குவிந்து இருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து நோயாளி ஒருவா் கூறியதாவது: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக மருத்துவா்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த மருத்துவமனையை நம்பியுள்ள 20-க்கும் அதிகமான கிராம மக்களுக்கு உரிய மருத்துவச் சேவை முறையாகக் கிடைப்பதில்லை. அறுவைச் சிகிச்சை அரங்கம் உள்பட அனைத்து வசதி இருந்தும் மருத்துவா்கள் இல்லாத நிலையில், உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மாவட்ட சுகாதாரத் துறை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பைக் மீது பேருந்து மோதியதில் முதியவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க

தேனியில் ஆக.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோடாங்கிபட்டி திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் காயம்

போடி அருகே திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.தேனி மாவட்டம், போடி பெருமாள் கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ராமராஜ் (53). இவரது மனைவி இந்திர... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேவதானப்பட்டி அருகே உள்ள டி. காமக்காபட்டியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவா் கைது

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாக இருந்தவரின் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பிரவீன்க... மேலும் பார்க்க