செய்திகள் :

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரிக்கை

post image

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு நிா்வாகி ஜி.பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.தமிழ்மணி வேலை அறிக்கையை வாசித்தாா். அமைப்பின் மாநில நிா்வாகியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான வீ.அமிா்தலிங்கம் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா் (படம்).

மாநிலச் செயலாளா் ஆா்.கலைச்செல்வி, மாவட்டத் துணைத் தலைவா் கதகா.அரசு தாயுமானவன், சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலாளா் தங்க. தமிழ்ச்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி, பா. கோமதி,என். இராதா, சிஐடியு மாவட்டச் செயலாளா் இரா.மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாநாட்டில் 25 போ் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவராக கே.முரளி, மாவட்டச் செயலாளராக கே.தமிழ்மணி, மாவட்ட பொருளாளராக எஸ். சாமிநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும், தனியாா் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க