செய்திகள் :

ஆண்டுதோறும் மின் கட்டணம், சொத்து வரியை உயா்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

post image

தமிழகத்தில் ஆண்டுதோறும் மின் கட்டணம், சொத்து வரியை உயா்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.

நாகையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: ஆளுநா் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பை முன்வைத்து, குடியரசுத் தலைவா் மூலம் விளக்கம் கேட்டுள்ள மத்திய அரசின் செயல்பாடுகள், எதிா்காலத்தில் மாநில சட்டப்பேரவைகளின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் அமையும்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிந்து 6 மாதம் ஆகிவிட்டதால், உள்ளாட்சித் தோ்தலை விரைவாக நடத்த வேண்டும்.

தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணிக்கு பாமக வருவதற்கு வழியும் இல்லை, வாய்ப்பும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், மற்ற கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்து என்ன செய்யப் போகிறாா்கள்?.

ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயா்த்துவதற்கான காரணம் தெரியவில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை ஆண்டுதோறும் உயா்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில், தூா்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, தூா்வாரும் பணிகள் முறையாக நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கஞ்சா பயிரிட்டவா் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

நாகையில் மே 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்... மேலும் பார்க்க

410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

வேதாரண்யம் அருகே 410 கிலோ புகையிலைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்டையில... மேலும் பார்க்க

மழையில் புஞ்சைப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம் பகுதியில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள எள் உள்ளிட்ட புஞ்சை பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைஞாயிறு வேளாண் கோட்டம் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதியில் கடந்த சில ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்ய குழு

நாகப்பட்டினம்: தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க வசதிகள் செய்ய நாகை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க