செய்திகள் :

ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; அவமானப்படுத்திய கும்பல்? - விபரீத முடிவெடுத்த பெண்

post image

கேரள மாநிலம் கண்ணூர் காயலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஷீதா(40). இவர் கடந்த 17-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலின்பேரில் அங்குசென்ற பினராயி காவல்நிலைய போலீஸார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரஷீதா தூக்கில் தொங்கிய இடத்தின் அருகே இருந்து அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை போலீஸார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் 3 பேரை கைது செய்தனர்.

கைது
கைது

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "ரஷீதாவும் அவரது ஆண் நண்பரான ரஹீஸ் என்பவரிடம் கடந்த 15-ம் தேதி மாலை 4 மணியளவில் அச்சங்கரை பள்ளிவாசல் அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த சிலர் ரஷீதாவை அவமானப்படுத்தும் விதமாக பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த இளைஞரை சுமார் 5 மணி நேரம் விசாரித்துள்ளனர். அப்போது இளைஞரின் மொபைல் போனை வாங்கி அதில் இருந்த போட்டோக்களை ஆய்வு செய்துள்ளனர். மேலும், ரஷீதா மற்றும் ரஹீம் ஆகியோரின் வீட்டில் இருந்து ஆட்களை வரவளைத்து பேசி அனுப்பி உள்ளனர். இதனால் மனம் உடைந்த ரஷீதா வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ரஷீதா தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில் கூட்டமாக சேர்ந்து பலர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தன்னை அவமானப்படுத்தியதாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது சம்பந்தமாக ரஹீஸ் பினராயி காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஹ்னாஸ், முபஷீர், பைசல் ஆகியோர் கைது செய்யப்பட்டு தலசேரி ஜூடீசியல் பஸ்ட் கிளாஸ் மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

அதே சமயம் ரஷீதா தற்கொலைக்கு அவரது ஆண் நண்பர் ரஹீஸ்-தான் காரணம் என ரஷீதா-வின் பெற்றோர் தலசேரி ஏ.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து ரஷீனாவின் தந்தை முஹம்மது, தாய் பாத்திமா ஆகியோர் கூறுகையில், "ரஷீனாவின் நகைகளை அவரது ஆண் நண்பர் பறித்துக்கொண்டார். அவர்களுக்கு சோசியல் மீடியா வழியாக பழக்கம் ஏற்பட்டது. பண நெருக்கடி காரணமாக சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தார் ரஷீதா. 5 மணி நேரம் இளைஞரை பிடித்துவைக்கவில்லை. அவரது பெற்றோர் வருவதற்கு காலதாமதம் ஆனதுதான் நேரம் ஆனதற்கான காரணம்" என்றனர்.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கண்ணூர் மாவட்ட தலைவர் பஷீர் கண்ணடிபறம்பு கூறுகையில், "அங்கு நடந்தது விசாரணை அல்ல. இருவருக்கும் உள்ள பிரச்னையில் ரஷீனா மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியஸ்தம் செய்துகொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்சி அலுவலகத்தில் இடம் அளித்தோம். ரஷீனாவின் தற்கொலைக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் சம்பந்தம் இல்லை" என தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட ரஷீதா

இதுபற்றி கண்ணூர் சிட்டி போலீஸ் கமிஷனர் பி.நிதின்ராஜ் கூறுகையில், "ஆண் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆட்கள் கூட்டமாக சேர்ந்து வந்து விசாரித்ததாகவும், மோசமாக சித்திரித்து மிரட்டியதாகவும் ரஷீதா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் பெயர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷீதாவின் ஆண் நண்பரை எஸ்.டி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 5 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இது சம்பந்தமாக ஆண் நண்பர் மீது புகார் அளித்தால் அதுகுறித்தும் விசாரணை நடத்துவோம்" என்றார்.

தற்கொலை தடுப்பு மையம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸார் விசாரணை; வளையத்தில் மேலும் ஒரு நடிகர்!?

தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்', `மனசெல்லாம்', `பார்த்திபன் கனவு', `நண்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்: பாஜக எம்எல்ஏ-க்கு சீட் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்.. உ.பி.,யில் அதிர்ச்சி

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் குறுகிய தூரத்திற்குள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே இருக்கிறது. அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே ... மேலும் பார்க்க

``நீட் மதிப்பெண் குறைந்து விட்டது'' - மகளை அடித்தே கொன்ற ஆசிரியர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்... மேலும் பார்க்க

ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர் - என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

கடந்த ஜூன் 18-ம் தேதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரெண்டபல்லா எனும் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை ... மேலும் பார்க்க

`தொடர் மணல் கடத்தல்' - 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! - கரூரில் நடந்தது என்ன?

கரூர் அருகே உள்ள வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கிறது உப்பிடமங்கலம். இந்த பேரூராட்சியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நவலடி மண... மேலும் பார்க்க

மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை

மும்பையின் தென்பகுதியில் உள்ள போர்ட் பகுதியிலிருந்து 28 வயது பெண் பைலட் கிழக்கு புறநகரில் உள்ள தனது வீட்டிற்கு இரவு டாக்சி ஏற்பாடு செய்து சென்று கொண்டிருந்தார்.இரவு 11 மணியாகிவிட்ட நிலையில் டாக்சி வழக... மேலும் பார்க்க