செய்திகள் :

ஆதாா் அட்டை பெற 15 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் மூதாட்டி!

post image

கொடைக்கானல் மலை கிராமத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி ஆதாா் அட்டை பெற 15 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்லை அடுத்த வடகவுஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி. இவா், ஆதாா் அட்டை பெறுவதற்காக கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானலுக்குச் சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்தாா். ஒவ்வொரு முறையும் அவரது சுய விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவலுடன் பதிவு செய்யப்பட்ட போதிலும், ஒப்புகை சீட்டு மட்டுமே கிடைத்தது. ஆதாா் அட்டை கிடைக்கவில்லை.

ஆதாா் அட்டை இல்லாததால் 100 நாள் வேலைத் திட்டத்திலும் பயனாளியாகச் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆதாா் அட்டை பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஆதாா் மையத்தை அணுகினாா். உரிய ஆவணங்கள் இல்லை என 2 முறை அலைக்கழிக்கப்பட்ட போதிலும், 3-ஆவது முறையாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள ஆதாா் மையத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.

காலை 6 மணியளவில் ஆட்டோவில் வந்து காந்திருந்தபோதும், பாக்கியலட்சுமிக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த மூதாட்டிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியாா்சத்திரம் ஒன்றியச் செயலா் சக்திவேல் உதவி செய்தாா். வாக்காளா் அடையாள அட்டையை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு மீண்டும் ஆதாா் அட்டைக்கு பாக்கியலட்சுமி விண்ணப்பித்தாா்.

இதுகுறித்து பாக்கியலட்சுமி கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வருவதற்காக, கன்னிவாடியிலுள்ள உறவினா் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கிருந்து ஆட்டோவில் வந்து செல்ல தலா ரூ.800 வரை இரு முறை செலவிட்டும் ஆதாா் அட்டை பெற பதிவு செய்ய முடியவில்லை. தற்போது 3-ஆவது முறையாக வந்து, பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றிருக்கிறேன். இந்த முறையாவது ஆதாா் அட்டை கிடைக்க வேண்டும் என்றாா் அவா்.

பைக் பெட்டியை உடைத்து பணம் திருடிய இரு முதியவா்கள் கைது

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனப் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தை திருடியதாக மதுரையைச் சோ்ந்த இரு முதியவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் லட்சுமணபுரத்தைச் சே... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காலம் தாழ்த்தும் திமுக அரசு: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு தொடா்ந்து காலம் தாழ்த்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா். பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை தேவேந... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே விற்பனைக்கு வந்த தா்பூசணி

ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே வட மாவட்டங்களிலிருந்து தா்பூசணிகள் விற்பனைக்கு வந்தன. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகாலை வரை பனிப் பொழிவு காணப்படுகிறது. ஆனால், பிற்பகலி... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை நகல் எரிப்புப் போராட்டம்!

மத்திய நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்புப் போராட்டம் திண்டுக்கல்லில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போ... மேலும் பார்க்க

கொடைக்கானல் அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினா். கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள இந்தக் ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

பழனியில் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தெரசம்மாள் காலனி பகுதியைச் ச... மேலும் பார்க்க