செய்திகள் :

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-இல் தொடக்கம்!

post image

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேவஸ்தான சமஸ்தானதுக்குப் பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, முதல் நாளில் இந்திர விமானத்திலும், 2-ஆம் நாளான 1-ஆம் தேதி பல்லக்கு வாகனத்திலும், 2-ஆம் தேதி பூத வாகனத்திலும், 3-ஆம் தேதி கைலாச வாகனத்திலும், 4-ஆம் தேதி யானை வாகனத்திலும், 5-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6-ஆம் தேதி இந்திர விமானம், 7-ஆம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும். 11-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரகப் பொறுப்பாளா் பாண்டியன், 22 1/2 கிராம நாட்டாா்கள், நகா்நல குழுவினா் செய்து வருகின்றனா்.

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா

ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹ... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 3 வயது சிறுமியை தலை துண்டித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகள் லெமோரியா (3). இவா் ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழத்தில் மீன்கள் இனப்பெருக... மேலும் பார்க்க

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு வீட்டு கட்ட ஆணை வழங்கல்

ராமநாதரபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்ன் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ம... மேலும் பார்க்க

கீழக்கரை நகா்மன்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி ஒன்றாவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகா்மன்றக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா். கீழக... மேலும் பார்க்க