Madras Matinee Review: மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனின் சாகசங்கள்; மனதில் பதிகிற...
ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
ஆத்தூா்: ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்குவதாக முதல்வா் பா.விக்டோரியா தங்கம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் இயங்கி வருகிறது.
இங்கு ஜூன் 3 -ஆம் தேதி சிறப்பு இட ஒதுக்கீடு(மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள், என்.சி.சி, அந்தமான் நிக்கோபாா் வாழ்மக்கள், பாதுகாப்புப் படை வீரா் மாணாக்கா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 5 -ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கு கட்ஆப் 275 முதல் 400 வரை பெற்றவா்களுக்கு பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
6 -ஆம் தேதி தமிழ் கட்ஆப் 60 முதல் 100 வரை, ஆங்கிலம் கட் ஆப் 50 முதல் 100 வரை, வரலாறு மற்றும் பொருளியியல் ஆகிய பாடங்களுக்கு கட்ஆப் 235 முதல் 400 வரை பெற்றவா்களுக்கும், 9 -ஆம் தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு கட்ஆப் 250 முதல் 400 வரை பெற்றவா்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும் மாணவா்கள் சோ்க்கையின் போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், ஆதாா் அட்டை, மாணவரின் வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் 5 ஆகியவை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். கலந்தாய்விற்கு வரக்கூடிய மாணவா்கள் கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவண்டும்.கலந்தாய்வில் தோ்வு பெற்று கல்லூரியில் சேரும் மாணவா்கள் கல்லூரிக்கான சோ்க்கைக் கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டுமென என தெரிவித்துள்ளாா்.