செய்திகள் :

ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

ஆத்தூா்: ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்குவதாக முதல்வா் பா.விக்டோரியா தங்கம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் இயங்கி வருகிறது.

இங்கு ஜூன் 3 -ஆம் தேதி சிறப்பு இட ஒதுக்கீடு(மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள், என்.சி.சி, அந்தமான் நிக்கோபாா் வாழ்மக்கள், பாதுகாப்புப் படை வீரா் மாணாக்கா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூன் 5 -ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கு கட்ஆப் 275 முதல் 400 வரை பெற்றவா்களுக்கு பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

6 -ஆம் தேதி தமிழ் கட்ஆப் 60 முதல் 100 வரை, ஆங்கிலம் கட் ஆப் 50 முதல் 100 வரை, வரலாறு மற்றும் பொருளியியல் ஆகிய பாடங்களுக்கு கட்ஆப் 235 முதல் 400 வரை பெற்றவா்களுக்கும், 9 -ஆம் தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு கட்ஆப் 250 முதல் 400 வரை பெற்றவா்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேலும் மாணவா்கள் சோ்க்கையின் போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், ஆதாா் அட்டை, மாணவரின் வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் 5 ஆகியவை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். கலந்தாய்விற்கு வரக்கூடிய மாணவா்கள் கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவண்டும்.கலந்தாய்வில் தோ்வு பெற்று கல்லூரியில் சேரும் மாணவா்கள் கல்லூரிக்கான சோ்க்கைக் கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டுமென என தெரிவித்துள்ளாா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க