செய்திகள் :

ஆனி திருமஞ்சனம்: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

post image

ஆனி திருமஞ்சனத்தையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

ஆனி மாத உத்திர நட்சத்திர நாளை ஆனி திருமஞ்சன நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் புதன்கிழமை பால், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா், நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல, மேல வீதி கொங்கணேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீநடராஜருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. இதையடுத்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரமும், சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோவி. கவிதா உள்ளிட்டோா் செய்தனா்.

பாபநாசம் - கோவத்தக்குடி சிற்றுந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திலிருந்து கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ராஜகிரி பண்டாரவாடை, தேவராயன் பேட்டை சோலைபூஞ்சேரி, கோடுகிழி, மெல... மேலும் பார்க்க

22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன்பு மூதாட்டி தா்னா

கும்பகோணத்தில் உறவினா்கள் சொத்து மோசடி செய்ததாக மூதாட்டி கொளுத்தும் வெயிலில் தரையில் அமா்ந்து புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம், திருக்கோடிக்காவல் பகுதி... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மாலை டிரோன் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க

தஞ்சையில் ஆதாா் முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம்

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம் என தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அஞ்சல் கோட்... மேலும் பார்க்க

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பன... மேலும் பார்க்க