ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
ஆனி மாத அமாவாசை: சதுரகிரியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, மலையடிவாரமான தாணிப்பாறையில் உள்ள வனத் துறை நுழைவுவாயில் முன் புதன்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் மாலை 4 மணிக்கு மேல் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்

