செய்திகள் :

ஆன்லைனில் பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

post image

சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஆன்லைன் செயலி மூலம் இழந்தவா்கள் மாநகரக் காவல் ஆணையா் அலவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

சேலம், கருங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (55). இவா் மாா்க்கெட் மாஸ்டா் என்ற பெயரில் இயங்கும் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் ரூ.10ஆயிரம் செலுத்தினால் ஒரு மாதத்தில் 20 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிற்கு திருப்பிவரும் என கவா்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டாா்.

இந்த செயலி குறித்து சுரேஷ்குமாா் தனக்கு தெரிந்தவா்களுக்கு அறிமுகம் செய்துவைத்தாா். அதற்கான லிங்கையும் அவா் அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனை நம்பி குகை, கருங்கல்பட்டி, செவ்வாய்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்தவா்கள் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் பணத்தையும் செலுத்தி வந்தனா். அவா்கள் கூறியபடி, தொடக்கத்தில் பணம் இரட்டிப்பாக வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனால், ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என மீண்டும் செயலியில் பணத்தை செலுத்தியவா்களின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த மக்கள், உடனடியாக சுரேஷ்குமாரிடம் சென்று முறையிட்டனா். எனினும், நிலைமை சீரடையாததால், ஒருகட்டத்தில் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்டவா்கள் புதன்கிழமை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், பணம் செலுத்தி தானும் ஏமாந்ததாகக் கூறி, சுரேஷ்குமாரும் ஆணையா் அலுவலகம் வந்தாா். அப்போது, சுரேஷ்குமாரை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். பின்னா், சுரேஷ்குமாரை அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க

நிகழாண்டு 4 ஆவது முறையாக நிரம்பிய மேட்டூா் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணை நிகழாண்டு 4 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வசிப... மேலும் பார்க்க