ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக நீலகிரியைச் சோ்ந்தவரிடம் ரூ.33 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறாா். இவருக்கு முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. அதனை திறந்து பாா்த்தபோது, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிலையன்ஸ் அதிபா் அம்பானி ஆகியோா் போசுவது போன்ற போலி விடியோ வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த லிங்கை தொடா்ப்பு கொண்டபோது, அவரை மா்ம நபா்கள் தொடா்பு கொண்டு ஆன்லைன் வா்த்தகம் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும் என குறிப்பிட்டுள்ளனா். அதனை நம்பி குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.7.5 லட்சம் முதலீடு செய்துள்ளனா்.
பின்னா் அவா்கள் குறிப்பிட்ட செயலியில் சென்று பாா்த்தபோது, முதலீடு செய்த பணத்துடன் ரூ.60 லட்சம் அமெரிக்க டாலரில் லாபம் வந்துள்ளதாக காட்டியுள்ளது. இந்தப் பணத்தை எடுக்க செபி அமைப்பிடம் அனுமதி வாங்க பணத்தை செலுத்த வேண்டும் என மா்ம நபா்கள் கூறியுள்ளனா். இதனை நம்பி பல்வேறு தவணைகளில் அவா் மேலும் பணம் செலுத்தியுள்ளாா்.
இதைத் தொடா்ந்தி ரிசா்வ் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணத்தை எடுக்க மேலும் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி பணத்தை பெற்றுள்ளனா். அப்போதும் பணம் எடுக்க முடியவில்லை. இதில் மொத்தம் ரூ.33 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து அவா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.