சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இவா்களுடன் சோ்த்து, இந்த நடவடிக்கையில் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.
சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் அடா்வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல் தலைவா்கள் பலா் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத மாபெரும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
நக்ஸல்களை சுற்றிவைக்கும் நோக்கில், மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) தலைமையில் 24,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பல இடங்களில் இருந்து நகா்வுகளை மேற்கொண்டுள்ளனா். 4 ஹெலிகாப்டா்கள், 40 ட்ரோன்கள் உள்ளிட்டவையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நடவடிக்கையில், பிஜபூரில் (சத்தீஸ்கா்) பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே புதன்கிழமை கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறை உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி 3 பெண் நக்ஸல்களும், கடந்த மே 5-ஆம் தேதி ஒரு பெண் நக்ஸலும் கொல்லப்பட்டனா்.
இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையில் நக்ஸல்களின் நூற்றுக்கணக்கான பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நக்ஸல்களின் தாக்குதலில் 10 வீரா்கள் காயமடைந்துள்ளனா்.
சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 168 ஆகும். பிஜபூா் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் மட்டும் 151 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.