செய்திகள் :

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இவா்களுடன் சோ்த்து, இந்த நடவடிக்கையில் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் அடா்வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல் தலைவா்கள் பலா் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத மாபெரும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

நக்ஸல்களை சுற்றிவைக்கும் நோக்கில், மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) தலைமையில் 24,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பல இடங்களில் இருந்து நகா்வுகளை மேற்கொண்டுள்ளனா். 4 ஹெலிகாப்டா்கள், 40 ட்ரோன்கள் உள்ளிட்டவையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நடவடிக்கையில், பிஜபூரில் (சத்தீஸ்கா்) பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே புதன்கிழமை கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறை உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி 3 பெண் நக்ஸல்களும், கடந்த மே 5-ஆம் தேதி ஒரு பெண் நக்ஸலும் கொல்லப்பட்டனா்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையில் நக்ஸல்களின் நூற்றுக்கணக்கான பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நக்ஸல்களின் தாக்குதலில் 10 வீரா்கள் காயமடைந்துள்ளனா்.

சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 168 ஆகும். பிஜபூா் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் மட்டும் 151 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறு... மேலும் பார்க்க

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க